IPL : Rahane வுக்கு Dhoni கொடுத்த அட்வைஸ் இதுதான்! | CSK

'டாஸ்' போடுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு தான் எனக்கே நான் விளையாட போவது தெரியும்.
IPL
IPLIPL

ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை வென்றது. சென்னை அணியின் அஜிங்யா ரஹானே 19 பந்துகளில் 50 ரன்களை கடந்து நடப்பு தொடரில் அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையைப் பெற்றார். மொத்தம் 27 பந்துகளில் 61 ரன்கள்குவித்தார்.

இந்த ஆட்டம் குறித்து ரஹானே கூறுகையில், "ஆடும் லெவனில் எனக்கு இடம் கிடைக்குமா என்பதில் உறுதி இல்லாமல் இருந்தது. 'டாஸ்' போடுவதற்கு சற்று முன்பு தான் எனக்கே நான் விளையாட போவது தெரியும். மொயீன் அலிக்கு உடல்நிலை சரியில்லாததால் என்னை சேர்த்திருப்பதாக பயிற்சியாளர் தெரிவித்தார்" என்று கூறினார்.

மேலும், "ஐபிஎல் ஒரு நீண்ட தொடர். இதில் எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் எந்த நேரத்தில் வாய்ப்பு வந்தாலும், அதற்கு தயாராக இருக்க வேண்டும். கேப்டன் தோனியும், பயிற்சியாளர் பிளமிங்கும் ஒவ்வொருவரையும் சுதந்திரமாக விளையாட அனுமதி அளித்துள்ளனர். அழுத்தமின்றி இயல்பான ஆட்டத்தை ஆடும்படி தோனி என்னிடம் கூறினார். அதன்படியே நான் விளையாடினேன்." என்று கூறினார்.

IPL
Memes : Dhoni இன் Last Over Sixerக்கு மும்பையில் நினைவு சின்னம் !

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com